Monday, April 2, 2007

கோவை

***


***குறிப்பு: மேலை உள்ள படத்துக்கும் இந்த பதிவுக்கும் தொடர்பு இல்லை


கோவை: என்ன ஈயா எப்படி இருக்கீங்க?

ஈயா: எனக்கு என்ன கோவை...நல்லா இருக்கேன்..அப்புறம் என்ன இந்த பக்கம்?

கோவை: சும்மாதான் ஈயா. வாக்கிங் போய் ரொம்ப நாள் ஆச்சு அதான் கிளம்பினேன்,வேலை ஒன்னும் இல்ல என்ன பண்ணுறது..

ஈயா: பேசாம நோக்ரி.காம் போய் ரிஜிஸ்டர் செய் நல்ல வேலை கிடைக்கும்..

கோவை: என்ன ஈயா கிண்டல் பண்ணுரீங்க...

ஈயா: அப்புறம் என்னப்பா! இருக்குற இடமே தெரியமாடேங்குது...அப்ப அப்ப சவுண்ட் கொடுத்துக்கிட்டே இருப்பா!

கோவை: அட நீங்க வேற அண்னே நீங்க இருக்குற இடம் வேற நான் இருக்குற இடம் வேற..என் பொண்டாடி கூட போண்ல சவுண்டா பேசினா...கூட சகோதரி கிட்ட போட்டு கொடுத்துடுறாங்க அப்புறம்..சகோதரி கோப பட்டுக்கிட்டு என் மொபைல் பில் கட்ட கூட பணம் கொடுக்க மாட்டேங்குறாங்க...

ஈயா: அட பாவமே! உன் நிலமை இப்படியா ஆவனும்..என்னப்பா. கேட்கவே கஷ்டமா இருக்கு...

கோவை: ஆமா ஈயா என்ன பண்ணுறது.. என்கூடவே இருந்த LKG பிரண்டு கூட. குச்சு மிட்டாய் வாங்க காசு குடுக்கலேன்னு கோச்சுக்கிட்டு போய்டாரு...என்ன பண்ணுறது..

ஈயா: நீ இன்னம் கத்துக்க வேண்டியது இருக்கு நீ ஆ..ஊன்னா அழுவ ஆரம்பிச்சுடுற..நீ கண் துடைக்கும் பொழுது எல்லாம் சேர்ந்து உன்ன ஆட்டைய போட்றாங்க...

கோவை: அது எல்லாம் இருக்கட்டும் அண்னே தங்கச்சி உங்க கிட்ட சொல்ல சொல்லி ஒரு விசயம் சொன்னாங்க..

ஈயா: என்னயா?

கோவை: உங்க பையனுக்கு ஒரு ஸ்டெதஸ்கோப் பொம்மை வாங்கி தாரேன்னு என்ன வந்து பார்க்க சொன்னாங்க...

ஈயா: சரி கோவை...பார்கலாம் ஒரு ஆறு மாசம் போகட்டும்..


கோவை: சீக்கிறம் வாங்க ஈயா தனி ஒரு ஆளா கஷ்டப்படுறேன்...