Sunday, September 2, 2007

எனக்கு தில் இருக்கு நான் எந்த பக்கம் என்று சொல்ல.உங்களுக்கு??

எல்லோரும் கடந்த சில நாட்களாக அவர் அவர்கள் எந்த பக்கம் என்று பதிவு போடுகிறார்கள், இந்த நேரத்தில் நானும் எந்தபக்கம் என்று சொல்லி ஆக வேண்டிய கட்டாயம்.

நான் அதை சொல்லாமல் போனால் பின்னொரு நாள் எனக்கு அவ பெயர் வரும், அதனால் நான் இங்கு அதை சொல்லியே ஆக வேண்டும். பல பேர் என்னிடம் நீ எந்த பக்கம் என்று கேட்டுவிட்டார்கள் இதுவரை சிரித்து மழுப்பி வந்தேன், இனி சொல்லாமல் இருந்தால்...

நான் தைரியமாக சொல்கிறேன் நான் வலது பக்கம் என்று...

என்ன குழப்பமாக இருக்கா பாருங்க நீங்களே சொல்லுங்க...நான் எந்த பக்கம் என்று...





ஆமாங்க நான் தூங்கும் பொழுது வலது பக்கம் படுத்துதான் தூங்குவேன். அப்ப நீங்க...:)))


நீங்கள் எந்தபக்கம் ???





டிஸ்கி: இத சொல்ல எதுக்கு சிரித்து மழுப்பவேண்டும் என்று நீங்க நினைக்கலாம். ஆனா அவுங்க கேட்டது ஆபிஸில் எந்த பக்கம் படுத்து தூங்குவாய் என்று..இதுக்கு சிரிக்காம என்ன பதில் சொல்ல முடியும்.

23 comments:

said...

யோவ்....நல்ல வேளை சொன்னா..

இல்லையின்னா..நான் வேற மாதிரி நினைச்சிருப்பேன்..

said...

எப்போதும் வலதுபக்கம்தான் என்றால் புரண்டுபடுக்கவே மாட்டீர்களா? வீரன் என்றால் மல்லாக்கப் படுக்கவேண்டும். அப்போதுதான் புறமுதுகு காட்டவில்லை என்று அர்த்தம். வலதுபக்கம் படுப்பேன் என்று சொன்னதன்மூலம் நீங்கள் ஒரு வலதுசாரி என்று நிரூபித்துவிட்டீர்கள்((-. by the by,நீங்கள் போலிடோண்டுவின் சித்தப்பா பையன் என்று ஒருபேச்சு அடிபடுகிறதே, உண்மைதானா?

said...

TBCD said...
யோவ்....நல்ல வேளை சொன்னா..
"இல்லையின்னா..நான் வேற மாதிரி நினைச்சிருப்பேன்.."

எப்படிங்க?

said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by the author.
said...

சுகுணாதிவாகர் said...
"வீரன் என்றால் மல்லாக்கப் படுக்கவேண்டும். அப்போதுதான் புறமுதுகு காட்டவில்லை என்று அர்த்தம்."

வீரன் என்றால் தானே? அப்ப நீங்க வேற யாரையோ சொல்றீங்க:))) என்ன சொல்லவில்லை:)))நான் 23 புலி கேசியின் அடுத்த வாரிசு

"by the by,நீங்கள் போலிடோண்டுவின் சித்தப்பா பையன் என்று ஒருபேச்சு அடிபடுகிறதே, உண்மைதானா? "

அடிபடுகிறதா ??? ரொம்ப நல்லதா போச்சு அடிபட்டு செத்துபோய்விடும் கவலை படாதீங்க:)))) சுகுணா.

said...

//*குசும்பன் said...

எப்படிங்க?*//


மல்லாந்து படுப்பீங்க அப்படின்னு..

ஆபீஸ்ல..ஒரு பக்கமா தூங்கினா..

கழுத்து சுழுக்கிக்கும்..

அதுனால..மாத்தி படுங்க....

அப்புறம்...நீங்க இந்த பதிவின் மூலம் நீங்கள் விடாது கருப்புக்கு ஆதரவு என்று நிருபித்து விட்டீர்கள்..

எப்படின்னு கேட்பவர்களுக்கு.......

பாருங்கள்..அவர் கருப்பு பாண்ட்ஸ் தான் உபயோகிக்கிறார்..

எவ்வளவோ வண்ணம் இருக்கும் போது..

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலர் அப்படின்னு....கருப்பு பூனை படம் தான் போட்டிருக்கார்..(விடாது கருப்புவும்..கருப்பு பூனை சிம்பல் என்பதை நினைவில் கொள்க....)


ஷ்ச்ச்ச்ச்ச்ச்ச் அப்பாஆஆஆஅ
இப்பவே கண்ணக் கட்டுதே..

said...

TBCD நல்லா இருங்க நல்லாவே இருங்க:)))

said...

ஏதோ என்னால ஆன...பதிவர்களுக்கான சேவை...


வரி கிடையாது....வாட் கிடையாது..

இலவச சேவை....

வெட்டு புலி, குயில் மார்க, ஹோம் லைட் என்பது எனது டிரேட் மார்க்களாகும்..."போலி"களைக் கண்டு ஏமாறாதீர்

said...

அண்ணே...ஓவர் குசும்பண்ணே ;))))

said...

//டிஸ்கி: இத சொல்ல எதுக்கு சிரித்து மழுப்பவேண்டும் என்று நீங்க நினைக்கலாம். ஆனா அவுங்க கேட்டது ஆபிஸில் எந்த பக்கம் படுத்து தூங்குவாய் என்று..இதுக்கு சிரிக்காம என்ன பதில் சொல்ல முடியும்.//

ஆபிஸ்லேயும் குப்புற படுத்துதான் தூங்குவீங்களோ..?

சொல்லுங்கப்பா எந்த ஆபிஸ்ல வேலை பாக்குறீங்க.. :)

said...

அலுவலகத்தில் உங்க மேலாளர் இடது புறம் தூங்குபவர்தானே.
எப்படி சரியா கண்டு பிடிச்சேன்.

said...

டிஸ்கி டாப்பு :))

//ஆபீஸ்ல..ஒரு பக்கமா தூங்கினா..
கழுத்து சுழுக்கிக்கும்..//

ரிப்பீட்டேய் :)))

said...

கோபிநாத் said...
"அண்ணே...ஓவர் குசும்பண்ணே ;)))) "

ஹி ஹி ஹி

said...

நிலவு நண்பன் said...
"ஆபிஸ்லேயும் குப்புற படுத்துதான் தூங்குவீங்களோ..?

சொல்லுங்கப்பா எந்த ஆபிஸ்ல வேலை பாக்குறீங்க.. :) "

முதல் வருகைக்கு நன்றி நிலவு நண்பன்:))

டேக்ரான் மேக்ரான் கம்பெனி:)))

said...

சுல்தான் said...
"அலுவலகத்தில் உங்க மேலாளர் இடது புறம் தூங்குபவர்தானே.
எப்படி சரியா கண்டு பிடிச்சேன்."

சுல்தான் சார்:)))) நீங்க நான் யார் மடியில் படுத்து தூங்குவேன் என்று சொல்லுங்க பார்கலாம்???

said...

delphine said...
தாங்கலை!


:)))) ஏன் ரொம்ப வெயிட்டா இருக்கா?

said...

G3 said...
//ஆபீஸ்ல..ஒரு பக்கமா தூங்கினா..
கழுத்து சுழுக்கிக்கும்..//

எப்படின்னாவது சொல்லி கொடுங்க அனுபவஸ்தர்களே!!!!!

said...

//*குசும்பன் சைட்...

டேக்ரான் மேக்ரான் கம்பெனி:)))*//

அங்க..கக்கூஸ் கழுவுறதால....வைகைப் புயல் சொல்லுவாரு...

அங்கேயேவாயா தூங்கற....

நல்ல மணசுய்யா....எங்க படுத்தாலும்..தூக்கம் வருது..உனக்கு..

எப்படி மாப் ஒரு கையில பிடிச்சிக்கிட்டே தூங்குவீங்களோ...

said...

நான் தஞ்சாவூர் பக்கம். . .

நீங்களும் அந்த பக்கம்னு தான் நான் நினைச்சேன். .

said...

வெங்கட்ராமன் said...
நான் தஞ்சாவூர் பக்கம். . .

நீங்களும் அந்த பக்கம்னு தான் நான் நினைச்சேன். .

ஐய்யா ஏன் உமக்கு இந்த வேலை நீங்க ஏன் உங்க ஊர் எங்க வீடு எங்கன்னு எல்லாம் சொல்றீங்க நாளைக்கு நீங்க என் எதிரியாக கூட ஆகலாம்:)))

said...

pathil sollu thambi..escape agatha kekkuran mekkuran raja.. :))

Anonymous said...

konja nanja kusumbu illappa

why, the pillow, between the two legs.
indirectely you are telling, that you are sleeping life this only