Tuesday, December 11, 2007

என்னால் அவள் இரண்டு மாதம் (கொஞ்சம் நான் வெஜ்)

வழக்கம் போல் காலை 8 மணிக்கு ஆபிஸ் வந்து http://www.gmail.com/ என்று அடித்துவிட்டுபின் user name: kusumbuonly password: ****** என்று டைப் செய்து மெயில்செக் செய்வதே முதல் வேலையாக இருக்கும், அதற்கும் காரணம் பிரியாவின் மெயில்.இன்று அவளிடம் இருந்து வந்த மெயிலை பார்த்தவுடன் தூக்கி வாரி போட்டது.

எல்லாம் ஒழுங்காகதான் போய்கொண்டு இருந்தது பிரியாவிடம் இருந்து மெயில் வரும் வரை, நான் யாரோ நண்பர்கள் தான் விளையாடுகிறார்கள் என்று ஆர்வம் காட்டவில்லை, பதிவை பற்றி பாராட்டி மெயில் வந்தால் "நன்றி" என்று ஒரு வார்தையில் பதில் அனுப்புவேன் பின் உங்களிடம் பேச வேண்டும் போன் நம்பர் தரமுடியுமா என்று வந்தது எதுக்கு வீண் செலவு ஆன்-லைனில் வாங்க சாட் செய்யலாம் என்றேன், இல்லை உங்க போன் நம்பர் கொடுங்க என்று பதில் வந்தது பின் நம்பர் கொடுத்த மதியம் +91984......... என்று புதிதாக ஒரு நம்பர் வந்தது எடுத்து பேசினால் நான் தான் பிரியா என்று அறிமுகம் செய்து கொண்டாள் பின் வழக்கமான விசாரிப்புகள் முடிந்த பிறகு ஆன் லைனில் வர சொன்னாள் அதைதானே முன்பே நான் சொன்னேன் என்றதற்கு உங்களிடம் இருந்து எதிர்பார்தது போல் மெயில் வரவில்லை சரி நம்பவில்லை போல அதனால் தான் பேசிவிட்டு ஆன் லைனில் வர சொல்லலாம் என்று சொன்னாள். மனதில் இருந்ததை சரியாக சொன்னாள்.

பின் எப்பொழுதும் முதல் ஆளாக பதிவை பற்றி விமர்சனமும் செய்வாள், காலையில் வந்ததும் முதல் மெயில் அவளிடம் இருந்து குட்-மார்னிங் மெயிலும் அதில் கனிவான விசாரிப்பும் இல்லாமல் இருந்தது இல்லை. நாட்கள் ஆக ஆக வாங்க போங்க போய் வா போ அவள் பக்கம் இருந்து.ஒரு நாள் ஏன் இன்னும் வாங்க போங்க என்றே சொல்லிகிட்டு இருக்கே வாடி போடி சொல்லு என்றாள் இல்லை எனக்கு வராது என்று சொல்ல அப்ப இனி பேசமாட்டேன் என்றாள் சரி என்றேன். கட் செய்துவிட்டு போனாள் பின் ஒரு நாள் முழுவதும் சாட்டும் இல்லை, போனும் இல்லை சரி மறுநாள் வருவாள் என்று விட்டுவிட்டேன் ஆனால் இரண்டு நாட்கள் வேலையாக இருந்ததில் மறந்துவிட்டேன். மறுநாள் "வளிடம் இருந்து போன் வந்தது "பேசமாட்டேன் என்றால் போ என்று விட்டுட்டே இல்ல நல்ல பழக்க வழக்கம் உன்னிடம் இருந்து போன் வரும் இல்லை மெயிலாவது வரும் நினைத்து ஏமாற்ந்ததுதான் மிச்சம்" என்று சொல்லிவிட்டு அழுதாள், எனக்கு என்னமோ போல் ஆனது. நான் சொன்ன சமாதானத்தையும் ஏற்கவில்லை போடா என்றால் அப்பொழுது கவனிக்கவில்லை அதன் பிறகு பெண்களுக்கே உரிதான போடா, பிசாசு, பொறுக்கி என்ற அடை மொழிகளோடு அழைக்க ஆரம்பித்தாள் எத்தனையோ முறை சொல்லியும் நான் வாடி போடி சொன்னது இல்லை இப்பொழுது வா போ என்று சொல்வதோடு சரி.

அன்று ஒரு நாள் சாட் செய்யும் பொழுது ஏதாவது ஜோக் சொல்லேன் என்றாள் எனக்கு சைவ ஜோக் எல்லாம் தெரியாது அசைவ ஜோக்தான் தெரியும் அதை எல்லாம் உன்னிடம் சொல்ல முடியாது என்று சொல்ல பரவாயில்லை சொல்லு என்றாள் அசைவ ஜோக்கில் பேசிக் ஜோக்கான எலி கதையை சொல்ல அதுக்கே விழுந்து விழுந்து சிரித்தாள். இரண்டு மாதம் முன்பு விசா மாற்ற ஊருக்கு வரபோகிறேன் என்று சொல்ல கண்டிப்பாக என் வீட்டுக்கு வரவேண்டும் என்றாள்ஒரு வார லீவில் தான் வருகிறேன்............அந்த ஊருக்கு வருவது என்றால் இரண்டு நாட்கள் ஆகும் முடிந்தால் வருகிறேன் என்றேன் இல்லை நீ வரவேண்டும் இல்லை நடப்பதே வேறு என்றாள்.

ஊருக்கு போய் விட்டு இரண்டு நாள் கழித்து திருப்பதி போவதாக சொல்லி வீட்டில் இருப்பவர்களுக்கு பட்டை நாமம் போட்டுவிட்டு அவள் ஊருக்கு சென்றேன் பஸ் நிலையத்தில் இறங்கியதும் கையில் இருந்த பையை யாரோ பிடுங்க திரும்பினால் நீல கலர் சுடிதாரில் ஒரு பெண் டேய் ஜொள்ளா நான் தான் டா பிரியா என்று சொல்ல முதன் முதலாக அவளை பார்த்தேன் மிக அழகாக இருந்தாள் பின் வீட்டு அழைத்து சென்றாள், வீட்டில் யாரும் இல்லை எங்கே என்று கேட்க எல்லோரும் சித்தப்பா பையன் திருமணத்துக்கு போய் இருக்காங்க எல்லாம் இரவுதான் வருவாங்க என்றாள். இதுவே அய்யனாராக இருந்தால் நானும் அவளும் நான்கு சுவரும் ஒரு கதவும் இரு ஜன்னலும் என்று டைட்டில் வைத்து கதை எழுதுவார் என்றேன் சத்தம் போட்டு சிரித்தாள்.

பின் அருகில் வந்து அமர்ந்தாள் ....................................(பதிவு ரொம்ப பெருசாக போவதால் சென்சார்). மாலை புறப்படும் பொழுது இதுபோல் நீ செய்வாய் என்று எதிர்பார்கவே இல்லை என்றாள், பயமாக இருக்கிறது என்றாள் பயப்படாதே எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

இன்று காலையில் டேய் குசும்பா இது எனக்கு இரண்டாவது மாதம் என்ன செய்யலாம் சொல்லு என்று கேட்டு மெயில் வந்தது அதை படிக்க போய்தான் பழைய நினைப்பு. பதிவு போட்டு இதுக்கு நீதான் காரணம் என்று சொல்லிவிடவா என்றாள்.

அம்மா தாயே என் மானத்தை வாங்கிடாத ஊருக்கு வந்த பொழுது உனக்கு வலை பூ கிரியேட் செய்ததே நான் செய்த பெரியதப்பு என்று பீல் செஞ்சுக்கிட்டு இருக்கேன் இதுல வெற்றிகரமாக இரண்டாவது மாதம் என்று போஸ்ட் வேறயா? எழுதி இருப்பது 12 பதிவு அதுல 10 பதிவு மரத்தின் இலை பச்சை, கடல் நீலம், மேகம் கருப்பு என்று கவிதை மீதி 1 அறிமுகம் இன்னொன்னு சமையல் குறிப்பு என்று அம்மா எழுதி தந்தது. நீ மட்டும் பிளாக் எழுத வெச்சது நான் தான் என்று சொன்ன தமிழ் மண மக்கள் என்னை ரவுண்டு கட்டி அடிப்பாங்க.

இன்னொரு திருப்பம்: பஸ் டிரைவர் என்னமா திருப்புகிறார் பாருங்க அது பெரிய திருப்பம்.


சர்வேசன் இதுக்கு மேல திருப்பம் வேண்டும் என்றால் PIT குழுவிடம் சொல்லி பெரிய திருப்பம் உள்ள ரோடா படம் புடிக்க சொல்லுங்க:)))

டிஸ்கி:
1) நான் ஊருக்கு போய் ஒரு வருடம் ஆகிறது, அப்பொழுது நான் வலை பதிவர் இல்லை.

2) நான் இதற்கு முன் எழுதிய கதைக்கான பின்னூட்ட டெம்ளேட் மற்ற பதிவர்களுக்கு உபயோகிக்க தான் என்பதிவில் அல்ல.

42 comments:

said...

ஆஹா, பெரிய திருப்பம் தான்.

சென்சார் பண்ண மேட்டரெல்லாம், நடந்தும் உண்மையில் ரெண்டு மாசம் இல்லங்கரதே, பெரிய திருப்பம்தான்.

மதுரை டாக்டர்.காளிமுத்த பாக்கணுமா? ;)

said...

:))

said...

கமெண்ட்டு ஓவரா நான்.வெஜ்ஜாயிடுச்சோ?
மோசமா இருந்தா, எடுத்துடுங்கோ ;)

said...

குசும்பன் ரொம்ப நல்லவருன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா. . . ?

said...

வாழ்த்துக்கள் குசும்பன் மாமா

குட்டீஸ் கார்னர்க்கு அடுத்த அட்மிசன் ரெடி

said...

எல்லாம் சொன்னீங்க சரி. ப்ரியாவோட ப்ளாக் அட்ரஸ் மட்டும் சொல்லாம விட்டுட்டீங்க????

said...

//2) நான் இதற்கு முன் எழுதிய கதைக்கான பின்னூட்ட டெம்ளேட் மற்ற பதிவர்களுக்கு உபயோகிக்க தான் என்பதிவில் அல்ல.//

ஆஹா.. அப்போ இது கதை கேடகரியா? சொன்னாத்தேன் தெரியுது :((

said...

SurveySan said...
ஆஹா, பெரிய திருப்பம் தான்.

சென்சார் பண்ண மேட்டரெல்லாம், நடந்தும் உண்மையில் ரெண்டு மாசம் இல்லங்கரதே, பெரிய திருப்பம்தான்.

மதுரை டாக்டர்.காளிமுத்த பாக்கணுமா? ;)///

அதுயாருங்க காளிமுத்து?

said...

இலவசக்கொத்தனார் said...
:))
*************

கொத்ஸ் கதை பற்றி இப்படி ஒரு ஸ்மைலியை போட்டா நான் என்ன நினைக்கிறது?

கதை ஜாம்பாவான்கள் தேவ், G, பினாத்தல், திவ்யா,நீங்க எல்லாம் இருக்கும் பொழுது நான் கதை எழுத வந்ததை நினைச்சு நக்கலாக போட்ட மாதிரி எடுத்துப்பதா? எப்படி எடுத்துப்பது!!!

*****************************
SurveySan said...
கமெண்ட்டு ஓவரா நான்.வெஜ்ஜாயிடுச்சோ?
மோசமா இருந்தா, எடுத்துடுங்கோ ;)//

அப்படி ஒன்றும் தெரியவில்லையே!!!

************************

நிலா said...
வாழ்த்துக்கள் குசும்பன் மாமா

குட்டீஸ் கார்னர்க்கு அடுத்த அட்மிசன் ரெடி////

குட்டிஸ் கார்னரில் இருக்கும் எல்லா குட்டி பொண்ணுங்களையும் ஓட ஓட ஈவ் டீசிங் செய்ய சொல்லி கொடுத்துதான் அட்மிசன்.

***************************

G3 said...
எல்லாம் சொன்னீங்க சரி. ப்ரியாவோட ப்ளாக் அட்ரஸ் மட்டும் சொல்லாம விட்டுட்டீங்க????///

http://டுபாகூர்.பிளாக்ஸ்பாட்.காம்:)))

***************************

said...

:)))
கலக்கல்!!

said...

உங்க ப்ரியா இங்கிலிபீஷ்லதான் போஸ்டுவாங்களா??

http://dubakoor.blogspot.com/

நீங்க சொன்ன அட்ரஸ்ல போய் பாத்தா அங்க எனக்கு ஒன்னும் புரியல :((

Anonymous said...

ஏங்க இம்புட்டு விளம்பரம் போடுறாங்க அவர் பாத்திருக்க மாட்டார என்ன..எதுக்கின்னு கேட்டா நீங்க...மக்கு..டீவியே பாக்குறதில்லை...

Anonymous said...

இது என்ன சினிமா..ஒரே நாளிலே..இரண்டு மாசம் ஆக..
இது வாழ்க்கை..குசும்பனோட வாழ்க்கை....அடுத்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் குசும்பன் ஐயா

பிரியன்

Anonymous said...

அந்த திருப்பத்திலே வச்சி உன்னை நான் அடிக்கிறேன்டா...தினமும் கவிதை எழுதிட்டேன்னு என்னையக் கொல்லுறா..

said...

G3 said...
///ஆஹா.. அப்போ இது கதை கேடகரியா? சொன்னாத்தேன் தெரியுது :((///

அவ்வ்வ்:((( எத்தனை நாள் காண்டு என் மேல!!!

தொடர் கதை எழுதுறவங்க எல்லாரையும் விட்டுவிடுங்க! ஒரு சிறு கதை எழுதுற என்னை பிடிச்சு நொங்குங்க!!!:(((

******************************

ஜெகதீசன் said...
:)))
கலக்கல்!!////

நன்றி:)))

********************

G3 said...
உங்க ப்ரியா இங்கிலிபீஷ்லதான் போஸ்டுவாங்களா??

http://dubakoor.blogspot.com/

நீங்க சொன்ன அட்ரஸ்ல போய் பாத்தா அங்க எனக்கு ஒன்னும் புரியல :((///

என்னது என் பிரியாவா, அம்மா தாயே இது கதைம்மா கதை, அது இருக்கட்டும் நான் தமிழில் http://டுபாகூர்.பிளாக்ஸ்பாட்.காம்
அப்படி டைப் செய்ய சொன்னா உங்களையாரு இங்கிலீஸில் டைப் செய்ய சொன்னது!!!

இதுக்கு பேருதான் சொல் பேச்சு கேளாமை!!!
**************************
பிரியா said...
ஏங்க இம்புட்டு விளம்பரம் போடுறாங்க அவர் பாத்திருக்க மாட்டார என்ன..எதுக்கின்னு கேட்டா நீங்க...மக்கு..டீவியே பாக்குறதில்லை...///

இங்கன தமிழ் சேனல் எதுவும் நான் பார்க முடிவது இல்லை நல்லவரே!!!

******************************

said...

டெம்ப்ளேட்டை எதுக்கு மாத்தீட்டீங்க? பழய டெம்ளேட் நல்லா இருந்ததே??
(நான் ப்ளாக்கர் டெம்ப்ளேட்டச் சொன்னேன்)
:PP

Anonymous said...

dr.kusumban neega ivalavu nallavara?

said...

உண்மையாவே மனசுக்கு திருப்தியா இருக்கு!

இப்பத்தான் நல்லாயிருக்கு!

விறுவிறுன்னு போகுது

பட் நான் நினைச்ச மாதிரியே நடந்துச்சு!

உங்களால செய்ய முடியுமான்னு எனக்கு கொஞ்சம் யோசனையாத்தான் இருந்துச்சு ஆனாலும் அசத்திட்டீங்க நண்பா!

டெம்ப்ளட் இப்பத்தான் சூப்பரா இருக்கு :)))

said...

நிஜமாலுமே நல்ல திருப்பமுள்ள கதைதானுங்க. கலக்கல் கதை. :)

said...

கதை கிடக்குது கழுத....

கொஞ்சம் நான் வெஜ் சொன்னீயே மருந்துக்கு கூட இல்லையே சாமி.. குறைந்தப்பட்சம் அந்த பேசிக் எலி ஜோக் யாவது சொல்லி இருக்கலாம்.

நம்பு வச்சு ஏமாத்துற பாவம் சும்மா விடாது அம்புட்டு தான் சொல்லுவேன்.

said...

அதெல்லாம் இருக்கட்டும் அந்த பிரியா பார்ட் ஏதோ அனுபவிச்சு எழுதினாப்புலயே இருக்குதே...

அங்கன யார் கூடயோ பழக்கமோ????

said...

நல்ல திருப்பம்.:-))))))

said...

துர்கா|thurgah said...
dr.kusumban neega ivalavu nallavara?///

ம்ம் இதில் என்ன சந்தேகம் உள்ளங்கை நெல்லி கனி போல் தெளிவாக எல்லாருக்கு அது தெரியுமே!!!!

*****************************
ஜெகதீசன் said...
டெம்ப்ளேட்டை எதுக்கு மாத்தீட்டீங்க? பழய டெம்ளேட் நல்லா இருந்ததே??
(நான் ப்ளாக்கர் டெம்ப்ளேட்டச் சொன்னேன்)
:PP////

பழய டெம்ளேட் டவுன் லோடு ஆக ரொம்ப லேட் ஆகுது அதனால் தான். பழக பழக பாலும் புளிக்கும்:))

****************************

ஆயில்யன் said...
உண்மையாவே மனசுக்கு திருப்தியா இருக்கு!

இப்பத்தான் நல்லாயிருக்கு!

விறுவிறுன்னு போகுது

பட் நான் நினைச்ச மாதிரியே நடந்துச்சு!

உங்களால செய்ய முடியுமான்னு எனக்கு கொஞ்சம் யோசனையாத்தான் இருந்துச்சு ஆனாலும் அசத்திட்டீங்க நண்பா!

டெம்ப்ளட் இப்பத்தான் சூப்பரா இருக்கு :)))///

நல்லா இருங்க நல்லாவே இருங்க!! கதைய பத்தி சொல்லாம டெம்ளேட் பத்தி சொல்லிக்கிட்டு!!!

**************************

அனுசுயா said...
நிஜமாலுமே நல்ல திருப்பமுள்ள கதைதானுங்க. கலக்கல் கதை. :)///

நன்றிங்க நீங்களாவது கதைன்னு ஒத்துக்கிட்டீங்களே!!!

****************************

நாகை சிவா said...
////கதை கிடக்குது கழுத....

கொஞ்சம் நான் வெஜ் சொன்னீயே மருந்துக்கு கூட இல்லையே சாமி.. குறைந்தப்பட்சம் அந்த பேசிக் எலி ஜோக் யாவது சொல்லி இருக்கலாம்.

நம்பு வச்சு ஏமாத்துற பாவம் சும்மா விடாது அம்புட்டு தான் சொல்லுவேன்.///

புலி அன்னைக்கு சாட்டில் சொன்னனே அதுக்கு பேரு என்னா!!! அப்ப ரொம்ப மோசமான ஆளு என்று சொல்லிவிட்டு இப்ப நைசா கேட்கிற!!!

**************************

நந்தா said...
அதெல்லாம் இருக்கட்டும் அந்த பிரியா பார்ட் ஏதோ அனுபவிச்சு எழுதினாப்புலயே இருக்குதே...////

அய்யா நந்தா தெய்வமே!!! அனுபவச்சி எழுதினா அது பலான கதையாகிடும்!!!ஏன்னய்யா இப்படி பீதிய கிளப்புறீங்க!!!

/////அங்கன யார் கூடயோ பழக்கமோ????///
இங்கன வீனா போன தம்பி, கர்ள கட்டை அய்யனார் இவுங்கதான் ராசா இருக்காங்க வேறு யாரும் இங்கன இல்லை!!!பழக
கல்யாணம் வேற ஆகலைய்யா பத்த வெச்சிடாதீங்க!!!!:))))
*****************
வெங்கட்ராமன் said...
குசும்பன் ரொம்ப நல்லவருன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா. . . ?///

அப்படி சொன்னா நம்ப மாட்டாங்க ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் என்று சொல்லனும்:))

*************************

said...

நிஜம்மாலுமே ட்விஸ்ட் தான். ஆனா எப்பிடி பாராட்டுறது..நீங்க டெம்ப்ளேத் எழுது கெடுத்துகிட்டீங்கா..

said...

//வழக்கம் போல் காலை 8 மணிக்கு ஆபிஸ் வந்து http://www.gmail.com/ என்று //

நண்பா!

ப்ளாக்கர்ல குந்திக்கிட்டு கும்மாளம் போடுக்கிட்டீருக்கறவங்க ஜிமெயிலுக்கெல்லாம் லிங்கு கொடுக்கறதெல்லாம் ரொம்ப்ப ஓவருதான் :)

said...

//அதன் பிறகு பெண்களுக்கே உரிதான போடா, பிசாசு, பொறுக்கி என்ற அடை மொழிகளோடு அழைக்க//

அதெல்லாம் அடைமொழி இல்ல, உண்மையான மொழிதாண்டே!

திருப்பக்கதைச்செம்மல் ஜெயிக்க வாழ்த்துக்கள்.

said...

சூப்பரு!!
கலக்கி போட்டீங்க அண்ணாச்சி!!

சர்வேசன் போட்டியினால நிறைய பேர் கிட்ட இருந்து நிறைய நல்ல கதைகள் வந்துகிட்டு இருக்கு!!
அதனால அவருக்கும் எனது நன்றிகள்!! :-)

said...

இப்பிடி ஒரு ட்விஸ்ட் எதிர்பார்க்கவே இல்லை குசும்பன்!!

பஸ் என்னமா திரும்புது!

//
இதுவே அய்யனாராக இருந்தால் நானும் அவளும் நான்கு சுவரும் ஒரு கதவும் இரு ஜன்னலும் என்று டைட்டில் வைத்து கதை எழுதுவார் என்றேன்
//
சூப்பர். இது இதத்தான் நான் எதிர்பார்த்தேன். நக்கல் இல்லாத குசும்பன் பதிவா?

said...

/இதுவே அய்யனாராக இருந்தால் நானும் அவளும் நான்கு சுவரும் ஒரு கதவும் இரு ஜன்னலும் என்று டைட்டில் வைத்து கதை எழுதுவார் என்றேன் /

ஏன்யா அவர் எவ்வளவு அற்புதமாக எழுதுறார், அவரைப் போய் இப்படி கலாய்க்க‌றீங்களே... இனி இப்படிச் செய்தால் அய்யனார் தற்கொலைப்படை உருவாகும் என எச்சரிக்கிறேன் (என்னைத் தலைவனாகச் சொல்லி அன்பர்கள் விரும்பிக் கேட்பதால் தலையில் அந்த முள் கிரீடத்தை அணிந்து கொள்கிறேன்).

(இது பிரசுரத்திற்கு அல்ல : சந்தோஷமா இருக்கு, இப்படியே தொடருங்க... ஹி ஹி....)

said...

வாழ்த்துக்கள் அண்ணே..

கலக்குங்க ;)

said...

என்னா ஒரு பில்டப்பு..
குசும்பு தாங்கலை அய்யா..!

நல்லா எழுதுங்க..
நாங்கள்லாம் சந்தோஷப்படுவோம்.!

said...

Seetha said...
நிஜம்மாலுமே ட்விஸ்ட் தான். ஆனா எப்பிடி பாராட்டுறது..நீங்க டெம்ப்ளேத் எழுது கெடுத்துகிட்டீங்கா..///

:) ரொம்ப நன்றிங்க இப்படி பாராட்டினா இன்னும் இதுபோல் கதை எழுத ஆரம்பிச்சுவிடுவேன்:)))

***********************

ஆயில்யன் said...
///நண்பா!

ப்ளாக்கர்ல குந்திக்கிட்டு கும்மாளம் போடுக்கிட்டீருக்கறவங்க ஜிமெயிலுக்கெல்லாம் லிங்கு கொடுக்கறதெல்லாம் ரொம்ப்ப ஓவருதான் :)///

ஹலோ நண்பா என்னது கும்மாளமா? தமிழ் சேவை செய்கிறோம் ஆக்கும்!!!
அல்லது தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்கிறோம்!!!

****************************

தம்பி said...
///அதெல்லாம் அடைமொழி இல்ல, உண்மையான மொழிதாண்டே!

திருப்பக்கதைச்செம்மல் ஜெயிக்க வாழ்த்துக்கள்.///

நக்கலு! லொள்ளு, நொர்நாட்டியம் ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும் வச்சுகிறேன் இரு.

************************

CVR said...
சூப்பரு!!
கலக்கி போட்டீங்க அண்ணாச்சி!!///

நன்றி தம்பி:))

***************************
மங்களூர் சிவா said...
இப்பிடி ஒரு ட்விஸ்ட் எதிர்பார்க்கவே இல்லை குசும்பன்!!

பஸ் என்னமா திரும்புது!////

இதுக்கு மேல பெரிய திருப்பம் எங்கேயும் யாரும் கொடுக்க முடியாது என்ன சிவா கரெக்ட்டுதானே!!!

//
இதுவே அய்யனாராக இருந்தால் நானும் அவளும் நான்கு சுவரும் ஒரு கதவும் இரு ஜன்னலும் என்று டைட்டில் வைத்து கதை எழுதுவார் என்றேன் //


///சூப்பர். இது இதத்தான் நான் எதிர்பார்த்தேன். நக்கல் இல்லாத குசும்பன் பதிவா?///

அப்ப நீங்களும் இதை கதைன்னு ஒத்துக்க மாட்டீங்க!!!:(((((

**************************
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
///ஏன்யா அவர் எவ்வளவு அற்புதமாக எழுதுறார், அவரைப் போய் இப்படி கலாய்க்க‌றீங்களே... இனி இப்படிச் செய்தால் அய்யனார் தற்கொலைப்படை உருவாகும் என எச்சரிக்கிறேன்////

தற்கொலைப்படையை முதலில் அவர் தலைமை தாங்கி வழிநடத்துட்டும்:)))
(எப்படி என் ஐடியா?:))))

///(என்னைத் தலைவனாகச் சொல்லி அன்பர்கள் விரும்பிக் கேட்பதால் தலையில் அந்த முள் கிரீடத்தை அணிந்து கொள்கிறேன்).///

உடம்பு முழுவது ஆப்பு வாங்கவேண்டும் என்று பிராத்தனை போல, அதை எப்படி தடுக்க முடியும்?:)) ரைட்டு இன்னொரு ஆள் தானா வந்து வலையில் விழுகிறார் அமுக்குங்க:)))

***************************
கோபிநாத் said...
வாழ்த்துக்கள் அண்ணே..

கலக்குங்க ;)///

நன்றி தம்பி:)))

***************************
சுரேகா.. said...
என்னா ஒரு பில்டப்பு..
குசும்பு தாங்கலை அய்யா..!

நல்லா எழுதுங்க..
நாங்கள்லாம் சந்தோஷப்படுவோம்.!////

நன்றி, ரைட்டு கலக்கிடலாம்:))

**************************

Anonymous said...

உரிதான போடா, பிசாசு, பொறுக்கி என்ற அடை மொழிகளோடு அழைக்க//

அதெல்லாம் அடைமொழி இல்ல, உண்மையான மொழிதாண்டே!

paatheerkala...ungkalai tholuruchi kaattanu oru manusan...

neengka vaankikattikum pothu avara yaen kooda vaitheerkal...unmaiyai udaithuvittar..

said...

Anonymous said...
//paatheerkala...ungkalai tholuruchi kaattanu oru manusan...///

போனா போகுது விட்டு விடலாம்:)))

said...

நல்லா எழுதி இருக்கீங்க குசும்பன்!! வாழ்க உன் குசும்பு!!

said...

நல்ல பெரிய திருப்பம். கதை நன்றாக இருக்கு. :-)

said...

நச்சுன்னு ஒரு கதை - கேள்வி கேக்காம பரிசு கொடுக்கலாம்.

குசும்பனின் குசும்பு - அய்யோ தாங்கலே

Anonymous said...

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல.. :)

said...

என்ன இருந்தாலும் ஒரு பதிவு கருவாகி உருவாகி பிரசவிக்க காரணமான எண்ண விதைகளை விதைத்தது யார் :))


அப்புறம் உங்க பாஸ்வேர்டு "******" ஆ. வலைப்பூவை கைப்பற்றிடலாம் போல இருக்கே. :)

said...

aha kilambitangayah kilambitangayah!!!

said...

சூப்பர் குசும்பா ::))

said...

டாப்-8க்கு வாழ்த்துக்கள்!

Click here to view results

பெட்டர் லக், அடுத்த முறை :)