Monday, May 25, 2009

பொறாமை படுபவர்கள் தவிர்கவேண்டிய பதிவு!

ஒரு படத்தில் விவேக்குக்கு தண்ணியில கண்டம் என்று ஜோசியன் சொல்லிவிடுவான் அவர் ரோட்டில் போகும் பொழுது மழை பெய்யும் அதுக்கு பயந்துக்கிட்டு பஸ் ஸ்டாப்பில் நிற்பார், அங்கு வரும் ஒருவர் ஏன் பயப்படுறீங்க வாங்க அழைச்சுக்கிட்டு போகிறேன் என்று குடைக்குள் அழைச்சுக்கிட்டு போகும் பொழுது இடி தாங்கி இந்த போஸில் தான் ரோட்டில் கிடப்பார். அது உங்களுக்கு நினைவுக்கு வரவில்லை என்றால் கூடபிரச்சினை இல்லை ஒருவருடம் முன்பு இதுபோல் என் எதிரி அய்யனார் ஒரு போஸ் கொடுத்தார் அது நினைவு இருக்கா? அப்படி இல்லாதவர்கள் பாக்கியவான்கள்.
ஆமா இது எதுக்கு இப்படி ஒரு போட்டோ ஒரு பதிவுன்னு தெரியலையா? இனி நானும் ரவுடிதான் ரவுடிதான் என்று உலகுக்கு எப்படி சொல்வது:)))

42 comments:

said...

இதுல அந்த புக் எந்த புக் மாப்பி!?

said...

//ஒருவருடம் முன்பு இதுபோல் என் எதிரி அய்யனார் ஒரு போஸ் கொடுத்தார் அது நினைவு இருக்கா? //

எலேய்.. போஸ் கொடுத்தது ரெண்டு வருசத்துக்கு முன்னாடிலே..

வெளங்கிரூம்.. ரெண்டு வருசம் கழிச்சு சமீபத்துல எதிர்பதிவு போடுற ஒரே ஆளு நீதாம்லே

said...

intha padathai parthathum enakku vivek nyabagam ellaam waralai.comedian janagaraj kathuware"enn pondaatti oorukku poyittaa"....athuthaan nyabagam waruthu......adakki waasinga brother!!!!

said...

இப்பத்தான் லக்கி, பதிவு எழுதறத அடுத்த கட்டத்துக்கு கொண்டு போறத பத்தி கமெண்ட் போட்டிருந்தாரு..

said...

அந்த புக் பெரிய புக் உள்ளார இருக்கு மாப்பி:))) எலேய் எதிர்பதிவு இல்ல இது சும்மா ஜாலிக்கு. லக்கி சொல்லி இருப்பது ஒழுங்கா எழுதுறவங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்வது பற்றி, நமக்கு ஏன் அது பற்றி கவலை. பின்னாடி கட்டத்தில் தூக்கி போடாம இருந்தா சரி:)))


சிற்பி அவ்வ் உங்களுக்கு அப்படியா தோனுது:)

said...

நீங்க சாதாரணா புஸ்தகங்களைத் தலைக்குத்தானே வச்சிகிட்டுப் படுப்பீங்க? இதுல வேற மாதிரி இருக்கே :)

said...

//சென்ஷி said...

இப்பத்தான் லக்கி, பதிவு எழுதறத அடுத்த கட்டத்துக்கு கொண்டு போறத பத்தி கமெண்ட் போட்டிருந்தாரு..
///

பயபுள்ளை இப்படித்தான் எடுத்துக்கிட்டு போவுணும் நினைச்சுருக்கமாட்டாரு !
:)))))))))))))

said...

எல்லா புக்கு சைசும் ரொம்ம்ப சிறுசா இருக்குது .....!!!! எல்லாம் காமிக்ஸ் புக்கா இருக்குமோ ....????

said...

காலுக்கிட்ட ஒரு இங்கீலிசு புக் !

ரைட்டு :))))

said...

நண்பா 3 ரிமோட்டு இம்புட்டு புக்கு இது இல்லாம ஒரு இங்கீலிசு புக்கு இதெல்லாம் இல்லாம அப்பப்ப ஆன்லைனு & ஆப்லைனு

24 ஹவர்ஸ் நாட் எனப் :(((

said...

//ஆயில்யன் said...

நண்பா 3 ரிமோட்டு இம்புட்டு புக்கு இது இல்லாம ஒரு இங்கீலிசு புக்கு இதெல்லாம் இல்லாம அப்பப்ப ஆன்லைனு & ஆப்லைனு

24 ஹவர்ஸ் நாட் எனப் :(((//

எப்படிடா ஆயிலு இப்படி வடைய பிச்சு பிச்சு போடுற :)

said...

ரொம்ப சந்தோஷமா இருக்கு குசும்பா...

சந்தோஷத்துல ஒரே அழுகையா வருது...

அய்யனார் உங்களை இப்படி மாத்திட்டாரா? ஆசிப் அண்ணாச்சியும் அதை பார்த்துட்டு சும்மா இருந்தாரா? அபி அப்பாவுக்கும் இதுல சம்மதமா? அப்ப சரி...

நீங்க ரவுடிதான்... :-)

said...

அது என்னய்யா தவிர்க!

சரி இதுல எவ்வளவு உன்னுடைய சொந்த புக் எவ்வளவு ஆட்டய போட்ட புக், எவ்வளவு ஓசி புக் னு சொல்லிட்டா சந்தோஷப்படுவோம் ல

said...

உம்ம லொல்லுக்கு ஒரு அளவு இல்லாம போச்சு நண்பரே!

said...

சுந்தர்ஜி தலைக்கு சாதாரணபுக்குதான் இது எல்லாம் ஸ்பெசல் புக்குல்ல அதான் இப்படி போஸ் கொடுக்க மட்டும்:)))


ஆயிலு ஏதோ நம்மால முடிஞ்சது

லவ்டெல் மேடி என்ன போஸ் கொடுத்தாலும் இப்படி சின்னபுள்ள ரேஞ்சுக்கு இழுத்துவந்துட்டீங்களே:(((

ஆயிலு காலுக்கிடையில் இங்கில்புக்கு ஏன்னா அதில் ஒரு உள் குத்து இருக்கு:)))


பைத்தியகாரன் அய்யா நீங்களே ரவுடின்னு சொல்லிட்ட பிறகு வேற என்ன இருக்கு.

நாகை சிவா கொஸ்டின்ஸ் எல்லாம் அவுட்டாப் சிலபஸ்!


இனியன் நன்றி

said...

புத்தகத்தையும் வச்சு பக்கத்திலே ரிமோட்டையும் வச்ச உங்கள் குசும்பு கலக்கல்.. :)

said...

என்னங்க எல்லாமே தமிழ் புத்தகமா இருக்கு..

ஒரு பிரெஞ்சு, ஸ்பானிஸ் அட்லீஸ்ட் ஒரு லிப்கோ டிக்சனரி வச்சிருந்த உலக எழுத்தெல்லாம் படிக்கற மாதிரி ஆயிருக்கும்ள..

said...

க.நா.சு.வின் அவதூதர் சூப்பர் புக்கு :-)

அதைமட்டுமாவது போஸுக்காக மட்டுமன்றி படிக்கவும்!

said...

//லக்கி சொல்லி இருப்பது ஒழுங்கா எழுதுறவங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்வது பற்றி, நமக்கு ஏன் அது பற்றி கவலை. பின்னாடி கட்டத்தில் தூக்கி போடாம இருந்தா சரி:)))
//

ஹிஹிஹி.. சந்தோஷமா இருக்கு.. ஹிஹிஹி

Anonymous said...

பழைய பேப்பர் விக்குறவன் எல்லாம் இப்படி போஸ் கொடுக்க ஆரம்பிச்சுட்டா என்னாவுறது நாட்டோட நெலமை? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

தூக்கம் வரலைனு புத்தகத்தை
எடுத்து வைச்சிருக்கிங்களா

said...

ithu yaaru??? karuppu shakila vaa??

said...

பெரிய படுப்பாளி.. சாரி... படிப்பாளிதான் ஒத்துக்குறோம்

said...

பழைய புத்தகக் கடையா மாமா? இல்ல சுட்ட புத்தகக் கடையா? பரவால்லையே.. ஃப்ரீயா இருக்கிற நேரத்துல ஒழுங்கா ஒரு வேலை பாக்கறிங்களே.. :)

ஆசிப் அண்ணாச்சியின் காணாமப் போன புத்தகங்கள் இங்கே கிடைக்கும்னு ஒரு போர்ட் வை மாமா.. :)

said...

//பொறாமை படுபவர்கள் தவிர்கவேண்டிய பதிவு! //

அய்யய்யோ படிச்சுட்டனே...

வூட்ல சொல்லி திருஷ்டி கழிக்க சொல்லுங்க.போட்டோ ஜூப்பரு.

said...

சிரிக்காம இருக்க முடியல தலைவா.. பாவம் உங்க கிட்ட மாட்டிட்டு ஒரு இலக்கியவாதி படுற பாடு இருக்கே..

said...

ப்ளாஷ் நியூஸ்:

"அடுத்த கட்டத்துக்கு நகர்தலைப்" பற்றி யாரோ சொன்னதை அடுத்த கட்டடத்துக்குன்னு படிச்சிட்டு 'கார்க்கி'கரப்பான்பூச்சியாட்டம் ஆயிட்டாராமாம்.

said...

ரிப்பீட்டு 1 :கார்க்கி said...
//லக்கி சொல்லி இருப்பது ஒழுங்கா எழுதுறவங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்வது பற்றி, நமக்கு ஏன் அது பற்றி கவலை. பின்னாடி கட்டத்தில் தூக்கி போடாம இருந்தா சரி:)))
//
ஹிஹிஹி.. சந்தோஷமா இருக்கு.. ஹிஹிஹி

ரிப்பீட்டு 2 :ஆசிப் மீரான் said...
பழைய பேப்பர் விக்குறவன் எல்லாம் இப்படி போஸ் கொடுக்க ஆரம்பிச்சுட்டா என்னாவுறது நாட்டோட நெலமை?

ரிப்பீட்டு 3 :$anjaiGandh! said...
பழைய புத்தகக் கடையா மாமா? இல்ல சுட்ட புத்தகக் கடையா? பரவால்லையே.. ஃப்ரீயா இருக்கிற நேரத்துல ஒழுங்கா ஒரு வேலை பாக்கறிங்களே.. :)
ஆசிப் அண்ணாச்சியின் காணாமப் போன புத்தகங்கள் இங்கே கிடைக்கும்னு ஒரு போர்ட் வை மாமா.. :)

இது நான் : இந்த மாதிரி பிலிம் காட்டும்போது வீக்லி மந்த்லி எல்லாம் வைக்கக்கூடாது தல, பாருங்க சக்திவிகடன் இருக்குது. அப்புறம் நான் கடைவிரிச்சேன்னா வீடு தாங்காது, தெருவுக்கு போக வேண்டியிருக்கும்..

said...

தல "என் பெயர் எஸ்கோபர்" படிச்சி பாருங்க சும்மா கிர்ர்ருனு இருக்கும்

:)
:P)

said...

சென்ஷி said...

இதுல அந்த புக் எந்த புக் மாப்பி!?
//

அப்படியே நல்ல புள்ளையாட்டம் நைஸ்சா கேட்குறத பாரு...:)

மிஸ்ஸான புக்கு எல்லாம் அங்க தான் இருக்காமுல்ல உண்மையா ?

ஹி ஹி

said...

[[[ஆசிப் மீரான் said...
பழைய பேப்பர் விக்குறவன் எல்லாம் இப்படி போஸ் கொடுக்க ஆரம்பிச்சுட்டா என்னாவுறது நாட்டோட நெலமை? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்]]]

என்னதான் சொல்லுங்க..

நம்ம ஆசிப் அண்ணாச்சியோட ரிவீட்டோட மதிப்பே தனி..!

வழி மொழிகிறேன்..

said...

தமிழ் புத்தகத்தை முன்னாலும் ஆங்கில புத்தகத்தை பின்னால் வைத்து மறைக்கு முயலும் குசும்பனின் நுண்ணரசியலை நான் கண்டிக்கிறேன் :)

அபி அப்பா கைல துண்டு வாங்கனதுக்கப்பறம் தான் இப்படி ஆச்சுனு சொன்னா நாங்க நம்ப மாட்டோம் :)

said...

நாங்களும் இப்படிக் குடுக்கறோம் பாருய்யா....

said...

ம்கும் கிருஷ்ணன்னு நினைப்பு, பாற் கடல் வெள்ளையாக இருக்கும், நீலமாக அல்ல !

said...

அண்ணாச்சி ரொம்ப நாளா காணாம போன புக்கெல்லாம் கிடைச்சிருச்சின்னு இப்போ தான் மெயில் அனுப்பினார்!

said...

எல்லா கமெண்ட்டும் சூப்பர்!!
:)

said...

அடடா..இவ்ளோ வச்சிருக்கீங்களா? ஒரு நாளைக்கு வந்து சொல்லாமக் கொள்ளாம தூக்கிட்டுப் போயிடுவேன் பாருங்க...!

said...

ம்ம்ம்...அப்போ வெள்ளிக்கிழமை அங்க போயிருக்கீங்க...ரைட்டு ;))

said...

அய்யனாரோட அந்த போஸ் அட்டகாசமா இருக்கும்,அதை விட அந்த பதிவு...

said...

சென்ஷி said...
//ஒருவருடம் முன்பு இதுபோல் என் எதிரி அய்யனார் ஒரு போஸ் கொடுத்தார் அது நினைவு இருக்கா? //

எலேய்.. போஸ் கொடுத்தது ரெண்டு வருசத்துக்கு முன்னாடிலே..

வெளங்கிரூம்.. ரெண்டு வருசம் கழிச்சு சமீபத்துல எதிர்பதிவு போடுற ஒரே ஆளு நீதாம்லே
\\

ரிப்பீட்டு :))

said...

Dear Mr. Kusumban, can you please list the titles of all the books which you have displayed here. I just wanted to know.

said...

Dear Mr.Kusumb, can you please list the names of the books near which you are giving pose?