Tuesday, October 26, 2010

என்னா பாஸ்டா ஓடுது....

ஏய் ஓடிவா ஓடிவா உன் புள்ள உள்ள இருந்துக்கிட்டு என்னை உதைக்கிறான் பாரு என்று கைய புடிச்சு வயித்து மேல வெச்சிக்கிட்டு தெரியுதா...உன்னை மாதிரியே வாலா இருக்கும் போல உள்ள அந்த உதை உதைக்குதுன்னு சொல்லியது...


ஸ்கேன் செய்யும் பொழுது என்னையும் உள்ளே வரசொல்லி இதோ பாருங்க கைய கால எப்படி ஆட்டுது பாருங்க அப்பாவுக்கு ஹாய் சொல்றான் போல என்று டாக்டர் சொல்லியது...


என்னங்க டாக்டர் சொன்ன தேதிக்கு முன்னாடியே வந்துடுங்க, உங்களை பார்த்துட்டுதான் நான் வார்டுக்குள்ளே போவனும், அதுமாதிரி புள்ளைய நீங்கதான் கையில வாங்கனும், சீக்கிரம் வந்துடுங்க என்று ஏர்போர்ட்டில் சொல்லிவிட்டு சென்றது...


அக்டோபர் 20 ஆம் தேதி காலை 4 மணிக்கு குழந்தைய எடுத்துக்கிட்டு வந்து என் கையில் கொடுத்தது, எல்லாம் ஏதோ நேற்று நடந்தது போல் இருக்கு. நாட்கள் எத்தனை சீக்கிரமாக ஓடுகிறது. போனவாரம் பையனின் முதல் பிறந்தநாளை கொண்டாடினோம். நண்பர்கள் பலரும் வந்து வாழ்த்த நல்லபடியாக நடந்து முடிந்தது.


குடும்பத்தோடு வந்திருந்த நண்பர்களிடம் ஒரு 15 கேள்வி அடங்கிய பேப்பரை கொடுத்து பதில் சொல்ல சொல்லியிருந்தோம்... அதில் ஒரு கேள்வி எந்த கிழமையில் திருமணம் நடந்ததுன்னு, அதுக்கு நண்பர் ஒருவர் வியாழக்கிழமை என்றும், அவரோட மனைவி ஞாயிறு என்றும் சொல்லியிருந்தார். அப்ப வியாழக்கிழமை கல்யாணம் செஞ்ச பொண்டாட்டி எங்கேன்னு ஆசிப் அண்ணாச்சி புடிச்சி ஓட்டிக்கிட்டு இருந்தார். இன்னொருவர் முதன் முதலாக கொடுத்த கிப்ட்டுக்கு தப்பா பதில் சொல்லியிருந்தார் அவர் முதலிரவின் பொழுது ஒரு கோல்ட் ரிங் வாங்கி கொடுத்திருக்கிறார் அதையே மறந்துட்டாரே வீட்டுக்கு வரட்டும் கவனிச்சிக்கிறேன் என்று ஒருவர் சொல்லிக்கிட்டு இருந்தார்... ஏதோ நம்மளால் முடிஞ்சது என்று சந்தோசமாக இருந்துச்சு.


வந்திருந்த கிப்ட்டில் இருந்த ஒரு மீன் பொம்மைய வெச்சி பயபுள்ள விளையாண்டுக்கிட்டு இருந்தான் அந்த மீன் வாய திறந்து திறந்து மூடும் நானும் அவனை அந்த மீன் கடிக்க வரமாதிரி விளையாட்டு காட்டிக்கிட்டு இருந்தேன் சிரிச்சி விளையாண்டுக்கிட்டு இருந்தான்... மீன் குஞ்ச கடிக்கபோவுதுன்னு கடிக்க வுட்டேன் அதன் பிறகு குஞ்சான மூடிக்கிட்டு ஓடி வந்து என் மேல உட்காந்துக்கிட்டு அந்த பொம்மைய வெச்சி விளையாடவே மாட்டேன்னுட்டான்:))


என் பிறந்தநாளாகட்டும்,திருமணநாளாகட்டும், பையன் பிறந்தநாளாகட்டும் எல்லாத்துக்கும் இன்றுவரை முதல் ஆளாக வாழ்த்துவது காயத்ரி சித்தார்த். இந்த முறை அவன் பிறந்தநாளுக்கு பத்து நாட்களுக்கு முன்பே இங்கிருக்கும் quickdubai என்ற ஆன்லைன் கிப்ட் ஷாப்பிங் மூலம் ஒரு கிப்ட் வவுச்சர் அனுப்பியிருந்தார்கள், அந்த ஆளும் போன் செய்து உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது அட்ரஸ் சொல்லுங்க என்றான், என்னடா பார்சல் யார் அனுப்பியதுன்னு சொல்லு என்றேன் அதெல்லாம் சொல்லமுடியாது உங்க அட்ரஸ் சொல்லுங்க என்றான், அப்ப அந்த பார்சலை நீயே வெச்சிக்க எனக்கு வேண்டாம் என்று சொல்லி போனை கட் செய்துவிட்டேன், பிறகு திரும்ப இரண்டு முறை அதே நம்பரிலிருந்து கால் வந்தது எடுக்கவில்லை, கொஞ்ச நேரம் கழித்து வேற மொபைல் நம்பரிலிருந்து கால் வந்தது எடுத்தேன், சார் உங்களுக்கு உங்க நண்பர் ஒருவர் கிப்ட் அனுப்பியிருக்கிறார் சர்பிரைஸாக இருக்கட்டும் என்றுதான் பேரை சொல்லவில்லை அட்ரஸ் சொல்லுங்கள் என்றான், பிறகு சொன்னேன். வந்து கொடுத்துவிட்டு சென்றான்.

***********



வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கதவை திறக்கங்காட்டியும் ஓடி வந்து காலை கட்டிக்கிட்டு ஷூவை கூட அவுக்க விடமாட்டான், தூக்கி கொஞ்ச நேரம் விளையாண்டு விட்டு கீழே விட்டால் தான் பேசாமல் இருக்கிறான், அதுமாதிரி தூங்கும் பொழுதும், சாப்பிடும் பொழுதும் அப்பா மேல லவ்வுன்னா லவ்வு அப்படி பொங்குது பயபுள்ளைக்கு, சாப்பிடும் பொழுது மடிமேல ஏறி நின்னு வாயை புடிச்சு நோண்டி கைய தட்டிவிட்டு ஒருவழி செஞ்சிடுவான், ஏதும் அவனுக்கு திங்க வத்தல் அல்லது அப்பளம் கொடுத்தா ஆசையா வாயில் கொண்டு வந்து ஊட்டி விடுவான், ஆவ்வ்வ்ன்னு கவ்வி அதை தின்னுட்டா கை விரலை திருப்பி திருப்பி பார்ப்பான் கையில் கானும் என்றதும் அவ்வ்வ்ன்னு அழ ஆம்பிச்சிடுவான் திரும்ப கையில் ஒரு பீஸ் வத்தலை கொடுக்கனும் சரி நாம தின்னாதானே அழுவுறான்னு திங்காம சும்மாச்சுக்கும் திங்கிற மாதிரி ஆக்டிங் கொடுத்தா அதுக்கும் அழகை ....பாசக்கார பய உட்டுட்டு சாப்பிட மாட்டேங்கிறானேன்னு சொல்லிக்கிட்டு சாப்பிடுவேன்.

நைசா கப்போர்டை திறந்து வெச்சிட்டு அவனுக்கு வா வான்னு சைகை காட்டிட்டு வெளியில் வந்துடுவேன் பயபுள்ள போய் கிளி ஜோசியக்காரன் கிளிமாதிரி மடிச்சி வெச்சிருக்கும் டிரசை ஒன்னு ஒன்னா எடுத்து கீழே போட்டுவிட்டு அந்த ட்ரே காலியானதும் சமத்தா வந்துடுவான், அவன் அம்மா வந்து பார்த்துட்டு காச்சு மூச்சுன்னு கத்திக்கிட்டு இருக்கும் நாங்க சமத்தா சாஞ்சாடம்மா சாஞ்சாடு விளையாண்டுக்கிட்டு இருப்போம். இன்னும் கொஞ்சம் பெருசா ஆகவுட்டு கிச்சனுக்கு போய் அரிசியையும் உளுந்தையும் எப்படி மிக்ஸ் செய்யனும் என்று சொல்லிதரனும்.

Sunday, October 24, 2010

ஒரு பதிவரின் பேட்டி- பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல!







டிஸ்கி1 : ஜிடாக்கில் வாசகர் கடிதம் அனுப்பி போட்டோ டூன்ஸ் போட்டு ரொம்ப நாள் ஆச்சுன்னு பதிவு எழுத சொன்ன வாசகர் அப்துல்லாவுக்கு இந்த பதிவு.

(டேய் சாட்டில் அவர் சொன்னது வாசகர் கடிதம் என்றால் எவனும் தப்பிதவறி SMS அனுப்பினா என்னடா சொல்லுவ? ஹி ஹி அது வாசகர் அனுப்பிய தந்தின்னு சொல்லுவோமுல்ல)

*****************
டிஸ்கி: முதலிலேயே சொல்லிவிடுகிறேன் பேட்டியை படித்தபின்பு வரப்போகும் எதிர்பதிவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல...

கேள்வி: நீங்கள் பத்தாவதில் வாங்கிய மார்க் எத்தனை?
பதில்: யோவ் என்ன கேள்வி இது? பதிவரை பேட்டி எடுக்க வந்துட்டு மார்க் எத்தனை என்று
எல்லாம் கேட்டுக்கிட்டு..

கேள்வி: டென்சன் ஆகாதீங்க 10வதில் வாங்கிய மார்க்கை வெச்சிதான் நீங்க லோக்கலா, STDயா?இல்ல ISDயான்னு முடிவு செய்வோம்...ப்ளீஸ் பதில் சொல்லுங்க.
பதில்: பத்தாவதுல ஜஸ்ட் பாஸ், 12வதுல பெயில்...

கேள்வி: ஆஹா அப்ப நீங்க படு லோக்கலாக இருப்பீங்கபோலயிருக்கே...
நீங்க ஏதும் மெடல் வாங்கியிருக்கீங்களா?
பதில்: ஆங் போன முறை நடந்த ஒலிம்பிக்கில் கோல்ட் மெடலும் இந்த முறை நடந்த காமன்வெல்த்தில் 5 கோல்ட் மெடலும் வாங்கியிருக்கேன்...நல்லா கேட்கிறய்யா கேள்வி.

கேள்வி: இல்ல சார் உங்களுக்கு தெரியாமலே உங்களுக்குள் திறமை இருந்திருக்கும் அதை யூஸ் செஞ்சு ஏதும் வாங்கியிருப்பிங்க யோசிச்சி பாருங்க...
பதில்: ஆங் இப்ப நினைவு வருது...5 வது படிக்கும் பொழுது என் கூட படிச்ச பொண்ணு குண்டு கவிதா அது என்னை போடா கருப்பாண்டின்னு சொல்லிட்டுன்னு அதை அடி அடின்னு அடிச்சு கீழ தள்ளி போட்டு கும்மு கும்முன்னு கும்மி கன்னத்தில் கடிச்சி வெச்சிட்டேன்.அதுக்காக எங்க கிளாஸ் சார் ராம் என்னை அடி அடின்னு அடிச்சு என் சிலேட்டில் இனி நான் யாரிடமும் சண்டை போட மாட்டேன் என்று எழுதி அதுல ஒரு சணல் கட்டி என் கழுத்தில் மாட்டி கிளாஸ் ரூமுக்கு வெளியில் நிக்க வெச்சாரு...அல்லாரும் ரொம்ப பெருமையா பார்த்துக்கிட்டு போனாங்க.


கேள்வி: நீங்க மெடல் வாங்கிய கதை போதும், ஏதும் கப்பு வாங்கியிருக்கீங்களா? பதில்: எழுதிய எல்லா செமஸ்டரிலும் கப்பு வாங்காம இருந்ததே இல்ல, ஆங்கிலத்தில் கப்பு கன்பார்ம்...

கேள்வி: என்னது ஆங்கிலத்தில் கப்பு வாங்குனீங்களா? அப்படி கப்பு வாங்கிய நீங்களா, ஒரு வெளிநாட்டு கம்பெனியில் வேலை செய்கிறீர்கள்? எப்படி இந்த மாற்றம்? எப்படி முடிந்தது?
பதில்: என்னய்யா இது எல்லாம் ஒரு மேட்டரா? முன்னாடி எல்லாம் அவிங்க இங்கிலீஸில் பேசினா நான் அங்கிருந்து நைசா ஓடிவிடுவேன்... பார்த்தேன் எவ்வளோ நாள்தான் ஓடுவதுன்னு திருப்பி இங்கிலீஸில் பேச ஆரம்பிச்சேன், நான் பேசுற இங்கிலீஸை பார்த்து அவன் அவன் கல்ல கண்ட நாய் மாதிரி ஓட ஆரம்பிச்சிட்டாய்ங்க.

கேள்வி: உங்களுக்கு வரும் வாசகர் கடிதங்கள் பற்றி?
பதில்: *$#@#@#%%$^**^&^^$%$$##

கேள்வி: என்ன சார் இப்படி திட்டுறீங்க...
பதில்:பேட்டி எடுக்கவே ஆள் இல்லாம என்னை நானே பேட்டி எடுத்துக்கிட்டு இருக்கேன் இப்ப வந்து வாசகர் கடிதம் அது இதுன்னுக்கிட்டு...

Monday, October 11, 2010

இது வேற ஆட்டோகிராப்!


நம்ம பயபுள்ளைங்க எதுல ஒத்துமையா இருக்குதோ இல்லீயோ ஒரு விசயத்துல இல்ல ஒன்னுக்கு விசயத்தில் ஒத்துமையா இருப்பாய்ங்க... ஸ்கூலுக்கு போகும் பொழுது தலையில் புத்தகமட்டைய மாட்டிக்கிட்டு எவனாவது ரோட்டு ஓரமா ஒன்னுக்கு அடிக்க ஆரம்பிச்சா எல்லோரும் பக்கத்துல பக்கத்துல நின்னுக்கிட்டு சொய்ங்ங்ங்ங்ன்னு பம்பு செட்டை திறந்துவிட்டு விடுவானுங்க...

அப்படி ஒருநாள் ஸ்கூலுக்கு போகும் பொழுது ஆரம்பிச்ச விளையாட்டுதான் ஒன்னுக்கு அடிக்கும் பொழுது நம்ம பேரை எழுதுவது...இந்த விளையாட்டும் படிப்படியா டெவலப் ஆனதுன்னு நினனக்கிறேன்... சும்மா ஒன்னுக்கு சொய்ங்ங்ன்னு அடிக்காம அதுல வட்டம் போடுவது, அலைகள் போடுவது, அப்புறம் எவன் முக்கி முக்கி ரொம்ப தூரம் ஒன்னுக்கு அடிக்கிறான் என்ற விளையாட்டுகளின் அடுத்த கட்டமாகதான் இந்த பேர் எழுதும் விளையாட்டு வந்துச்சு.


இந்த விளையாட்டு ஆரம்பச்சதிலிருந்து தண்ணிய நிறையா குடிச்சிட்டு ஒன்னுக்கு போகாம அடக்கி வெச்சிக்கிட்டு ஊட்டுக்கு போகும் பொழுது பேர் எழுத ஆரம்பிப்போம். இதுலயும் நான் ஜெயிக்க முடிஞ்சது இல்ல... ஏன்னா சரவணவேல் என்கிற பேரை எழுத ஆரம்பிச்சி "ண" வில் ரெண்டு சுழி முடிக்கங்காட்டியும் டேங் காலி ஆகிடும் முக்கி முக்கி அடிச்சாலும் "ண" வை தாண்ட முடிஞ்சது இல்ல. அப்புறம் பேரை சுருக்கி சரவணன் என்றும் முயற்சி செய்து பார்த்தேன் சுழி போடும் பொழுதே டேங் காலி ஆகிடும்...இதுல எப்பவும் ராமு தான் ஜெயிப்பான். எந்த பிரச்சினையும் இல்ல வெறும் கோடுதான் "மு" வுக்கு மட்டும் கொஞ்சம் கஷ்டப்படனும் ஆனா சித்திரமும் கைபழக்கம் என்பதுபோல் பழக பழக் வந்துவிடும்.


இதுல முக்கியமா ஒவ்வொரு எழுத்து எழுதி முடிச்சதும் தம் கட்டி பம்பு செட்டை நிறுத்தி நகர்ந்து நின்னுதான் அடுத்த எழுத்த எழுத ஆரம்பிக்கனும் இல்லாட்டி பேர் எழுதும் பொழுது எல்லா எழுத்தும் ஜாயிண்ட் ஆயிடும். அதும் நம்ப பேரை எழுதும் பொழுது "ன்"க்கு புள்ளி வைக்க தம் கட்டி "ன"வுக்கு மேல சரியா குறி பார்த்து புள்ளி வைக்கனும். இது எல்லாம் சரியா வராதுன்னு பேரை இங்கிலீஸில் எழுதலாம் என்று முடிவு செஞ்சு என் பேரை சுருக்கி SVEL ஆக்கிய பிறகுதான் போட்டியில் ஈசியா ஜெயிக்க முடிஞ்சுது. சில சமயம் பேரு எழுதும் பொழுது ஓவரா ஆட்டி பக்கதுல இருக்கவன் மேல எல்லாம் பட்டு விடும்... சண்டையில் கிழியாத சட்டை எங்கே கிடைக்கும் என்பது மாதிரி போட்டின்னு வந்துட்டா இது எல்லாம் சகஜம் என்று போய்க்கிட்டே இருக்கனும்.


அப்புறம் ஒன் டேவை 20 20 ஆக்கியது போல அப்புறம் போட்டிய வேற மாதிரி மாத்தினோம்... மண் சுவத்துல எவன் போர்சா அடிச்சி செங்கல் தெரியவைக்கிறான் என்று போட்டி வைக்க ஆரம்பிச்சோம்... போற வழியில் இருக்கும் மண்சுவத்து வீட்டு சந்தில் நின்னு சொய்ய்ய்ய்ய்ய்ங்ன்னு அடிச்சு யாரு பெருசா செங்கல் தெரிய வைக்கிறாங்கன்னு நடக்கும் போட்டிய ஒரு பத்து நாள் கூட நடத்த முடியாம போச்சு...வீட்டுக்கு சொந்தகாரன் பார்த்து கம்பு எடுத்து அடிக்க வந்ததில் ராமு கீழே விழுத்து முட்டி பேர்ந்து போச்சு அதிலிருந்து அந்த விளையாட்டு நிறுத்தப்பட்டுவிட்டது.


அப்புறம் செடியில் இருக்கும் பழுத்த இலைய குறிபார்த்து அடிப்பது, பாஸா பெயிலா பூ மேல குறிபார்த்து அடிப்பதுன்னு பலவகையில் இந்த விளையாட்டு டெவலப் ஆனது. சில சமயம் முக்கி முக்கி அடிக்கிறோம் என்ற விளையாட்டில் அந்த பக்கம் போற ஆளுங்க மேல பட்டு திட்டுவாங்கியதும் உண்டு.அப்புறம் குழிப்பறிச்சு அதுல அடிச்சு குட்டி குட்டி குளம் ஏற்படுத்தி அப்பவே நாங்க முன்னோடியா இருந்திருக்கோம் என்று நினைச்சுப்பார்க்கும் பொழுது ரொம்ப பெருமையா இருக்கு:)))