Thursday, August 30, 2012

முகமூடி...



மிஸ்கின் படம்+ட்ரைலரும் ஆக்சன் மூவி மாதிரி நல்லாதான் இருக்கு. ஏமாத்திட மாட்டாருன்னு நம்பி போனேன். போகும் பொழுதே மனைவியிடம் நம்ம ஆளுங்க இங்கிலீஸ் படத்தில் சூப்பர் மேன், பேட் மேன் எல்லாம் சாகசம் செஞ்சா அடாடா சூப்பருன்னு சொல்லுவாங்க, தமிழ்படத்தில் என்றால் 1000 நொட்டை சொல்லுவாங்க, மிஸ்கின் அப்படி எல்லாம் சொதப்ப மாட்டாருன்னு நினைக்கிறேன் என்று சொல்லிக்கிட்டே போனேன்.

படம் முடிந்து வெளியே வந்த +Suresh Babu அய்யய்யோ சாவடிச்சிட்டான் என்றுசொன்ன பொழுது என் நம்பிக்கை வலுத்தது..பினாத்தலார் மொக்கைன்னு சொன்னா படம் சுமாராகவாச்சும் இருக்கும் என்று நம்பினேன்

முகமூடி போட்டு ஒரு வீட்டில் கொள்ளை.. சுத்தியலால் அடித்து கொலை என்று கொஞ்சம் கிரிஸ்பியா ஆரம்பிச்சிது...வழக்கம்போல் ஜீவா இந்த படத்திலும் வேலை வெட்டி இல்லாத தறுதலையா இருக்காரு...பார்த்ததும் ஒரு பொண்ணு மேல லவ் வந்துடுது, ஆனா அந்த பொண்ணு  இவரை ஒரு ரவுடியாக நினைக்குது அதுனால முகமூடி போட்டுக்கிட்டு போய் டாவ் அடிக்க நினைக்கிறாரு...கொஞ்சம் ஒர்கவுட் ஆனதும் அடுத்த நாளும் அப்படி முகமூடி போட்டுக்கிட்டு போறாரு.அந்த பொண்ணும் இவர் மூஞ்சை பார்க்கலாம் என்று நினைச்சி ஒளிஞ்சிக்கிட்டு இருந்து குஞ்சை மட்டும் பார்த்துடுது. முக்கியமான மேட்டரையே பார்த்துட்டோம் நெக்ஸ்டைம் மூஞ்ச பார்த்துடுவோம் என்று நினைச்சிக்கிட்டு இருக்கு. அந்த நேரத்தில்தான் வைக்கிறாரு ஒரு ட்விஸ்ட்..

இந்த இடத்தில் ஹீரோயினை பற்றி அவசியம் சொல்லியே ஆகவேண்டும்...மார்க்கெட்ல ஜீவாவை போலீஸ்கிட்ட பிடிச்சிக்கொடுக்கும் சீன்ல மூஞ்சை காட்டாமலேயே அடுத்த சீன் போய் இருப்பார்...அதுமாதிரி கடைசி வரை அந்த மூஞ்சை காட்டாமலேயே இருந்திருக்கலாம். அஞ்சாதே படத்தில் வரும் மொட்டை கடைசி வரை முகத்தை காட்டாத மாதிரி இதையும் செஞ்சிருக்கலாம்... இல்லாட்டி ஜீவா போட்டு இருக்கும் முகமூடி மாதிரி இதுக்கும் ஒண்ணு செஞ்சி மாட்டிவுட்டு இருக்கலாம்.

சரி கதைக்கு வருவோம்..அப்படியாப்பட்ட நேரத்தில் முகமூடி ட்ரஸ்ஸோட இவர் ஓடிப்போய் கொள்ளைக்கார்களில் ஒருவனை புடிச்சி போலீஸ்கிட்ட ஒப்படைக்கிறார். வில்லன் போலீஸை கொல்ல வரும் பொழுது அந்த இடத்தில் இவரு முகமுடி இல்லாம போய் பழிய இவர்மேல வாங்கிக்கிறாரு...அதிலிருந்து இவரு எப்படி எஸ்கேப் ஆகிறார் என்கிறதுதான் கதை.

கண்ணதாசன் காரைக்குடி பாட்டும் பார் சாங்தான்..அது கொஞ்சம் ரியலா இருக்கும்...இதுலயேயும் ஒரு பார் சாங் செட்டிங் முதல் எல்லாம் ரொம்ப மோசமா தெரியுது. அதுமாதிரி எவ்வளோநாள் தான் வெளிநாட்டு சீடி பார்த்து படம் எடுப்பதுன்னு வெளிநாட்டுக்கும் போயிடனும் என்று நினைச்சிட்டாரு போல வாயமூடி சும்மா இருடா பாட்டுக்கு சம்மந்தமே இல்லாத மாதிரி வெளிநாட்டுல ஷூட்டிங்.பார்க்க ரொம்ப கேவலமா இருக்கு..மிஷ்கின் படத்துல பாட்டு இதுமாதிரி இருக்காது.

நான் லாஜிக், மண்ணாங்கட்டிக்குள் எல்லாம் போகவிரும்பவில்லை...அட்லீஸ்ட் எடுத்துக்கிட்ட கதைய சுவாரஸ்யமா சொல்லியிருக்கலாம்..ஜீவாவுக்கு நேரம் சரியில்லையா? இல்ல எனக்கு நேரம் சரியில்லையான்னு தெரியல..போய் மாட்டிக்கிட்டேன்.

வில்லன் சுத்தியலால் அடிச்சி எல்லாரையும் கொல்றாரு.. அப்படியே படம் பார்வர்களையும்.

Sunday, April 29, 2012

நித்தியானந்தா ஸ்பெசல் 29-04-12




டரியள் டக்ளஸ்:

நித்தி: எனது ஆசிரமத்தில் கல்வி பணியாற்றுவது போல மதுரை ஆதீன மடத்திலும் கல்வி பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

டக்ளஸ்: நண்பன் படத்தில் விஜய் மாத்துவது மாதிரி ஒரு எழுத்த எவனோ தப்பா மாத்திட்டான்....திரும்ப சரி செஞ்சி நித்திக்கு ஒரு காப்பி அனுப்புங்கப்பா!

******************
மதுரை ஆதினம்: சைவ சித்தானந்தத்தில் ஆற்றல் மிக்கவர்களாக இருந்து வந்தார்கள். அதேபோல நானும் எழுந்தருளி ஞானம், எழுச்சி, உணர்வு, போர் குணம் போன்ற தகுதியடையவனாக இருக்கிறேன். 

/நித்தியானந்த சுவாமியை நியமித்து சம்பிரதாயபடி ஏற்று உள்ளோம். இவர் எழுச்சிமிக்கவர், ஆற்றல் மிக்கவர்.


டக்ளஸ்: இப்ப தெரியுதுய்யா எப்படி இவரு செலக்ட் ஆனாருன்னு.

***********
நித்தி: மதுரை ஆதீனம் எனது வயதை விட மிக பெரியவர். அனுபவசாலி.//

டக்ளஸ்: அடப்பாவி அவருமா?

நித்தி: உலக அளவில் சிறந்த ஆன்மீகவாதிகளின் பெயர்களை வெளிநாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் உள்ள ஸ்ரீரவி சங்கர், அமிர்தானந்தமயி, குருதேவ், என் பெயர் இடம் பெற்றுள்ளது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.//

டக்ளஸ்: ராசா நீ வெளிநாட்டு பத்திரிக்கையான வொயிட் ஹவுஸ்ல வரவேண்டிய ஆளுய்யா...என்ன கொஞ்சம் லைட்டிங் பத்தல..

*********
நித்தி: எனது ஆசிரமத்தில் உள்ள டாக்டர்கள், என்ஜினீயர்கள், படித்த சன்னியாசிகள் 50 பேரை ஆதீன மடத்தின் நிர்வாகத்தை கவனிக்க மதுரைக்கு அனுப்பி வைப்பேன்.

டக்ளஸ்: நீ எவ்வளோ பேரை வேண்டும் என்றாலும் அனுப்பு ராசா...நாங்க ஒரே ஒரு கேமிரா மேனை மட்டும் அனுப்பி வைக்கிறோம்.

*********
நித்தி: மதுரை ஆதீனத்துக்குட்பட்ட 4 கோவில்கள் உள்ளது. 4 கோவில்களுக்கும் இந்த ஆண்டிற்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். இன்று முதல் ஆதீன மடத்தில் தினசரி அன்னதானம் வழங்கப்படும். 24 மணி நேரமும் இது வழங்கப்படும்.

டக்ளஸ்: டாய் டாய் வருவதுக்கு முன்னாடி முதல்வன் படம் பார்த்துட்டு வந்தியா ராசா...ரொம்ப ஓவரா போற ஆமா! சன் டிவிக்கு மாசம் ஒருமுறை கேசட் வழங்க வேண்டும் என்பது என்னை மாதிரி ரசிகர்களின் வேண்டுகோள்.

*******
செய்தி: ஆதீனத்திற்குள் புகுந்த இந்து மக்கள் கட்சியினர், திருஞானசம்பந்தரின் பாடல்களைப் பாடினர். பதிலுக்கு நித்தியானந்தாவின் புகழை அவரது ஆதரவாளர்கள் பாடியதால் மோதல் சூழல் ஏற்பட்டது. 

டக்ளஸ்: அடப்பாவிங்களா போராட்டம் ஏதோ செஞ்சிருக்காய்ங்கன்னு பார்த்தா பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி நடத்தியிருக்காய்ங்கய்யா!

Saturday, March 10, 2012

சும்மா சும்மா!


*************
வெள்ளிக்கிழமை ஒருநாள் தான் விடுமுறை என்பதால் அன்று வேறு எந்த வேலையையும் வெச்சிக்க மாட்டேன், நெட்பக்கம் கூட வரமாட்டேன். அதெல்லாம் ஒரு காலம்...இப்ப கேமிரா வாங்கியதும் நிலமை தலைகீழாக மாறிவிட்டது.

நேற்று Gulf photo plus என்ற குரூப் ஆட்கள் நடத்திய போட்டோகிராபி வொர்க்‌ஷாப்புக்கு காலையிலிருந்து மாலை வரை டிக்கெட் புக் செய்திருந்தோம். (நான், ஆபிசர், கீழைராஸா, ரியாஸ்), நிறைய யூஸ் புல் டிப்ஸ் கிடைத்தது.

வெட்டிங் & ஈவண்ட் போட்டோ எடுக்கும் பொழுது போஸ் எப்படி கொடுக்கவைக்கனும் என்று ஒரு செசன், அதில் வெட்டிங் கவுன் எல்லாம் போட்டு சூப்பர் மாடல் இருந்தாங்க, அவுங்களுக்கு கல்யாணப்பையனா போஸ் கொடுக்க...மாடல் வேண்டும் யாராவது வாங்க என்றதும்..நான் வருகிறேன்னு எழுந்தேன்...என் ஹைட்டை பார்த்துட்டு நீ சரிவரமாட்ட..குள்ளமான ஆளு வேண்டும் என்றார்.

:(((

அதன் பிறகு அந்த மாடலோடு எப்படி போஸ் கொடுக்கனும் என்று எல்லாம் ஒரு குள்ளப்பயல வெச்சி சொல்லிக்கொடுத்துக்கிட்டு இருந்தார்...கிஸ் செய்வது மாதிரி போஸ் கொடுக்கும் பொழுது எப்படி போட்டோ எடுக்கனும் என்று சொல்லிக்கொடுத்தார், பயபுள்ளைக்கு கிஸ் செய்ய வரவில்லை நீ ரொம்ப டென்சனா இருக்கன்னு சொல்லிட்டு...அந்த புள்ளைய கொடுக்க சொல்லி போட்டோ எடுத்துக்காட்டினார்.

# நல்லவேளை நாம போகவில்லை போய் இருந்திருந்தா நம்ம கற்பு என்ன ஆயிருக்கும் என்று ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருந்தேன்.

*******
கொஸ்டின் பேப்பரை படிச்சிப்பார்க்க 10 நிமிடமாம்...அட நாங்க எல்லாம் எக்ஸாமை எழுதி முடிக்கவே 10 நிமிடம் எடுத்துக்க மாட்டோம்.

#நாங்க எல்லாம் அப்பவே அப்படி!

***********

Sunday, March 4, 2012

என் விகடன்


இந்த வார விகடன் திருச்சி ஏரியா பதிப்பில் குசும்பு ஒன்லி பற்றி வந்திருக்கு, புத்தகத்தை வாங்கிப்பார்த்துவிட்டு அம்மா,அப்பா, சித்தப்பா ரொம்ப சந்தோசப்பட்டாங்க.

என்விகடன் அட்டைப்படத்தில் போட்டோவை பார்த்ததும் இன்னும் ரொம்ப சந்தோசமாக இருந்தது. விகடனுக்கும்,லோகநாதனுக்கும் என் நன்றிகள்.

Saturday, February 11, 2012

டரியள் டக்ளஸ் 11-02-2012

அதிமுகவுக்கு விஜயகாந்த் சவால் வேடிக்கையானது : சரத்குமார்

டரியள் டக்ளஸ்: பாஸ்.....நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்...இதுல நீங்க அவரை கிண்டல் செய்யிறீங்க.

*******

திராவிடக் கட்சிகளுடன் எக்காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம்-ராமதாஸ் மறுபடியும் அறிவிப்பு.

டக்ளஸ்: அவரு நமக்கு சொல்ற மாதிரி தெரியல...அவரு மறந்துடக்கூடாதுன்னு அவரு திரும்ப திரும்ப சொல்லி மனப்பாடம் செஞ்சிக்கிறாரு போல...

*********
ஆளுநர்தான் புதியவர்... உரை புதிதல்ல: விஜயகாந்த்.

டரியள் டக்ளஸ்: இதை சொல்லும் எதிர்கட்சி தலைவர் தான் புதியவர். வாக்கியம் புதிதல்ல.

*********
இடுக்கன் வருங்கால் நகுக என்பதை கடைப்பிடிக்கும் ஒரே ஆள்..ஜி.கே.மணி "ராமதாஸ் மீதான வழக்கு... நகைப்பை ஏற்படுத்துகிறது."

*********
எல்லோரும் நிதி கேட்பார்கள், நான் 'சாட்டிலைட்' கேட்டேன், குழம்பி விட்டார் பிரதமர்-மோடி.

டரியள் டக்ளஸ்: ஒரு பச்சமண்ணுக்கிட்ட கேட்கிற கேள்வியா இது?

********

பிரச்சினைகளைத் தீர்க்க விரைவில் புதுமையான போராட்டம்- விஜயகாந்த் அறிவிப்பு..

டரியள் டக்ளஸ்: எதிரிங்களுக்கு இவரோட பட சிடிய கொடுப்பாரோ?

********
சொன்னாலும் சொல்லுவாங்க...

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்- நியூசிலாந்தில் 10 முறை நில அதிர்வு...ஆகவே முல்லைபெரியாறு அணையை இடிக்கவேண்டும்.- கேரள முதல்வர்


எனக்கும் கேமிராவில் கண்டம், கர்நாடகா அமைச்சர்களுக்கும் கேமிராவால் கண்டம் ஆக மொத்தம் கேமிராவால் கர்நாடகாவுக்கு ஆபத்து. ----நித்தியாணந்தர்

மேட்டர் செஞ்சாலும் கேமிராவில் படம் புடிச்சி டீவியில் போடுறாய்ங்க, மேட்டர் படம் பார்த்தாலும் படம் புடிச்சி டிவியில் போடுறாங்க...தனிமனித சுதந்திரத்தில் தலையிடுறாங்க..- டிஸ்மிஸ் செய்யப்பட்ட அமைச்சர்கள்.

Thursday, January 12, 2012

நண்பன்


இப்படி ஒரு விஜயை பார்த்து எவ்வளோ நாள் ஆச்சி. இதுக்காகவே அமீர்கானுக்கு நன்றி சொல்லனும். கடைசியாக விஜய் நடித்து பார்த்த படம் திருப்பாச்சி, அதன் பிறகு விஜய் படத்தை டீவியில் கூட பார்த்தது இல்லை. ஷங்கர் டைரக்சன், 3 இடியட்ஸ் ரீமேக் என்பதால் நம்பிபோகலாம் என்று நேற்று இரவு போனேன்.


படம் ஆரம்பித்தது முதல் கடைசி வரை கொஞ்சம் கூட போர் அடிக்காமல் செம ஜாலியா போச்சு, இப்படி என்ஜாய் செஞ்சி, தியேட்டரில் இருந்த அனைவரும் செமயா சிரிச்சி கடைசியாக பார்த்த படம் எதுவென்று நினைவில் இல்லை.

படத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால் ஏற்கனவே 3 இடியட்ஸ் பார்த்தவங்களுக்கு கொஞ்சம் சலிப்பாக இருக்கலாம், என்னய்யா அப்படியே சீன் பை சீன் காப்பி அடிச்சிருக்காங்க, மில்லிமீட்டர் பேரைக்கூடவா காப்பி அடிப்பாங்க, சத்யராஜ் ஷேவ் செய்துக்கும் பொழுது போடும் பாட்டு ட்ராக்கை கூட மாற்றம் இல்ல இப்படி படம் எடுக்க எதுக்கு ஷங்கர், ஜெயம் ரவி அண்ணன் ராஜா போதுமே என்று எல்லாம் சொல்லுவாங்க. சரி சங்கர் கொஞ்சம் மாத்தி அப்படி இப்படி டிங்கரிங் செஞ்சி எடுத்தா...ச்சே திரி இடியட்ஸ் எப்படி இருக்கும் தெரியுமா? கெடுத்துட்டாங்கய்யான்னு சொல்லுவாங்க.

எனக்கு படத்துல பெருசா எதுவும் குறை இல்ல, கொடுத்த காசுக்கு சந்தோசமா சிரிச்சி ரசிச்சி படம் பார்த்தாச்சு.

சத்யராஜ் அவர் இயல்பா பேசி நடிச்சிருந்தாலே செமயா இருந்திருக்கும், அவரு ஹிந்தியில் பேசும் ஆள்மாதிரியே பேச ட்ரை செஞ்சதுதான் கொஞ்சம் சொதப்பல்.


"திருக்குறள் சைஸ்க்கு ப்ளாஷ் பேக் சொல்றான் பாரு" "நீ யாரு? இவனுக்கு அக்கா" மாதிரியான டயலாக்குகள் ரசிக்க வைக்கின்றன.

சைலன்சருக்கு சத்யன் செமயா செட் ஆவுறாரு...ஶ்ரீகாந்த் மட்டும் கொஞ்சம் சொதப்பல்.

நண்பன் பார்க்கும் பொழுது 3 இடியட்ஸ் வெச்சி கம்பேர் செய்யாம படம் பாருங்க...நிச்சயம் படம் பிடிக்கும்.